செய்திகள்
கைது

கரூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-10-12 12:16 GMT   |   Update On 2021-10-12 12:16 GMT
கரூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் என்.எஸ்.கே. நகர் பகுதியில் இருந்து அருகம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் வெங்கமேடு சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது நவீஸ் (வயது 45) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News