செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி 29ம் தேதி ஆலோசனை

Published On 2020-09-24 11:00 GMT   |   Update On 2020-09-24 11:00 GMT
தலைமைச் செயலகத்தில் வரும் 29-ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மாத தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், வரும் 29-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது பொது முடக்க தளர்வுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News