செய்திகள்
கைது

பாணாவரம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2020-09-18 11:31 GMT   |   Update On 2020-09-18 11:31 GMT
பாணாவரம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:

பாணாவரம் மகேந்திரவாடி ஏரி மூலக்கரை பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் சோளிங்கர் தாலுகா காக்காதோப்பு கிராமத்தை சேர்ந்த மகி என்ற மகேந்திரன் (வயது 32) என்பவரை பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி கைது செய்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மகேந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News