செய்திகள்
கொரோனா நோயாளி பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்

இறந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி

Published On 2020-09-13 11:25 GMT   |   Update On 2020-09-13 11:28 GMT
உயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி பாதுகாப்பு உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த பாப்பாநேரி பகுதியைச் சார்ந்தவர் மின்னல் (வயது 70). இவர், உடல் நலிவுற்ற நிலையில் நேற்று காலமானார். இவரது மகன் முருகேசன் (40). இவர், கொரோனா பாதிப்பால் வாணியம்பாடியில் உள்ள கொரோனா மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தனது தாயார் இறந்த தகவலை கேள்விப்பட்டு முருகேசன் கண்ணீர் விட்டு கதறினார். கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும், அதற்காக தனக்கு டாக்டர்கள் அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி மன்றாடி உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து, அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்துச் சென்றனர். அங்கு, தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மரணம் அடைந்த தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மகனுக்கு அனுமதியளித்த வருவாய்த்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News