செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 250 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 222 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 250 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.