செய்திகள்
கொள்ளை

கோபியில் எல்.ஐ.சி. அதிகாரி வீட்டில் 20 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2019-10-08 10:15 GMT   |   Update On 2019-10-08 10:15 GMT
கோபியில் எல்.ஐ.சி. அதிகாரி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

கோபி ஜே.எஸ். நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). இவர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி பெயர் கிரிஜா (54). இவர் கோபி நாகர் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார்.

இவர்களது மகன் வீடு ஈரோட்டில் உள்ளது. இதையொட்டி கடந்த 5-ந் தேதி குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள மகன் வீட்டுக்கு வந்தனர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். உள்ளே பீரோவை திறந்து அதில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை ஈரோட்டில் இருந்து திரும்பிய முருகேசன் வீடு திறந்து கிடப்பதையும், நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த துணிகர சம்பவம் குறித்து அவர் கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணரும் கைரேகையை பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News