செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 31 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-10-24 17:26 GMT   |   Update On 2020-10-24 17:26 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 31 ஆயிரத்து 787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 886 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 6 ஆயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 31 ஆயிரத்து 787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 24 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 63 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 124
செங்கல்பட்டு - 1,314
சென்னை - 10,147
கோவை - 3,757
கடலூர் - 753
தர்மபுரி - 564
திண்டுக்கல் - 287
ஈரோடு - 843
கள்ளக்குறிச்சி - 263
காஞ்சிபுரம் - 597
கன்னியாகுமரி - 581
கரூர் - 302
கிருஷ்ணகிரி - 608
மதுரை - 695
நாகை - 422
நாமக்கல் - 749
நீலகிரி - 315
பெரம்பலூர் - 77
புதுக்கோட்டை - 252
ராமநாதபுரம் - 162
ராணிப்பேட்டை - 264
சேலம் - 1,836
சிவகங்கை - 140
தென்காசி - 147
தஞ்சாவூர் - 402
தேனி - 156
திருப்பத்தூர் - 252
திருவள்ளூர் - 1,286
திருவண்ணாமலை - 502
திருவாரூர் - 427
தூத்துக்குடி - 489
திருநெல்வேலி - 366
திருப்பூர் - 1,041
திருச்சி - 548
வேலூர் - 470
விழுப்புரம் - 465
விருதுநகர் - 181
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 3
உள்நாடு - 0
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 31,787
Tags:    

Similar News