செய்திகள்
இன்னும் 2 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
நிவர் புயலின் மையப்பகுதி இன்னும் 2 மணி நேரத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது.
நிவர் புயலின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:-
அதிதீவிர நிவர் புயல் வங்கக்கடலில் தற்போது கடலூரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
அதேபோல் புயல் சென்னையில் இருந்து தெற்கே-தென்மேற்கே 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
புயலின் மையப்பகுதி கடந்த 6 மணி நேரமாக 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வந்துள்ளது.
நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரி கடற்கரை அருகே அடுத்த 1 முதல் 2 மணி நேரத்தில் (நள்ளிரவு 2 மணி முதல் 3 மணியளவில்) கரையை கடக்கும்.
அப்போது புயல் காரணமாக காற்றின் வேகம் 120 முதல் 130 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.