செய்திகள்
தற்கொலை

சத்தீஸ்காரில் துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

Published On 2020-10-31 20:24 GMT   |   Update On 2020-10-31 20:24 GMT
சத்தீஸ்காரில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுக்மா:

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே சுக்மா மாவட்டம் தோர்னபல் போலீஸ் நிலையத்தில், சி.ஆர்.பி.எப். வீரர் ரோகிதாஸ் (வயது 27) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு பணியில் இருந்தார்.

அப்போது போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ரோகிதாஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சி.ஆர்.பி.எப். வீரரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் அவரது ‘வாட்ஸ்-அப்’பை ஆய்வு செய்தபோது, காதல் விவகாரம் காரணமாக அவர் தறகொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News