செய்திகள்
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடங்கிபட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பாரதிதாசன் நகரை சேர்ந்த சந்துரு (வயது 30) உள்பட 4 பேரும் போலீசாரை கண்டதும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.