செய்திகள்
சேலத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் இன்று சந்தித்து பேசினர்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள்

Published On 2021-04-04 08:58 GMT   |   Update On 2021-04-04 09:17 GMT
சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினர்
சேலம்:

தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சினி கி.ரி. ராமசாமி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ், தமிழக மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் வெங்கடாசலம், தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன், தேசிய நதிகள் இணைப்பு கூட்டணி தலைவர் தலைவாசல் சண்முகம், தமிழக பருத்தி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பொன்னுவேல் செயலாளர் பழனிவேல், தென்னை, பனை கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ஈரோடு நல்லுசாமி, பூ உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பனமரத்துப்பட்டி சண்முகம், மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் ஆகிய அனைத்து சங்கத்தினர் இன்று சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News