ஆன்மிகம்
களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவில்

களக்காடு கோவிலில் வைகாசி திருவிழா ரத்து

Published On 2021-05-17 07:53 GMT   |   Update On 2021-05-17 07:53 GMT
களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவிலில் வைகாசி தேரோட்ட திருவிழாவு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் தேரோட்ட திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றம், 23-ந் தேதி நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளும் நிகழ்ச்சியும், 24-ந் தேதி தேரோட்டமும் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது. அதுபோல களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவில் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று தொடங்க இருந்த வைகாசி தேரோட்ட திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபற்றி திருவிழா மண்டகப்படிதாரர்களுக்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News