செய்திகள்
ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், சோனியாவுடன் சந்திப்பு

Published On 2021-01-19 02:17 GMT   |   Update On 2021-01-19 02:17 GMT
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் நேற்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இது, ஓராண்டு பூர்த்தி செய்தநிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் நேற்று சந்தி்த்தார்.

டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது. அப்போது, ராகுல்காந்தியும், ஜார்கண்டுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்.பி.என்.சிங்கும் உடன் இருந்தனர்.

மந்திரிசபையில் காலியிடங்களை நிரப்புதல், பல்வேறு வாரிய பதவிகளை நிரப்புதல் உள்ளிட்ட கூட்டணி அரசு பிரச்சினைகள் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து சோனியாவுடன் ஹேமந்த் சோரன் ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News