உள்ளூர் செய்திகள்
கைது

லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது

Published On 2021-12-03 09:22 GMT   |   Update On 2021-12-03 09:22 GMT
லாலாபேட்டை அருகே லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:

லாலாபேட்டையை அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 38) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News