செய்திகள்
டிக்-டாக் மூலம் பழகிய பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிட்டவர் கைது
டிக்-டாக் மூலம் பழகிய பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் நந்தனார்காலனி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு டிக்டாக் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த தர்மர் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக இவர்கள் 2 பேரும் சேர்ந்து டிக்டாக் மூலம் வீடியோ வெளியிட்டு வந்தனர்.
திடீரென அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் தர்மருடன் பேசுவதை அந்த பெண் நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த தர்மர் உன்னுடைய வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் வாட்ஸ்அப்பில் அந்த பெண் தர்மருடன் பேசியதை ஆபாசமாக சித்தரித்து வீடியோவாக வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் தர்மரிடம் கேட்ட போது, ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார்.
இது குறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரை கண்ணன், ஏட்டு ஜெபராஜ் தலைமையிலான போலீசார் தஞ்சாவூருக்கு சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் நந்தனார்காலனி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு டிக்டாக் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த தர்மர் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக இவர்கள் 2 பேரும் சேர்ந்து டிக்டாக் மூலம் வீடியோ வெளியிட்டு வந்தனர்.
திடீரென அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் தர்மருடன் பேசுவதை அந்த பெண் நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த தர்மர் உன்னுடைய வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் வாட்ஸ்அப்பில் அந்த பெண் தர்மருடன் பேசியதை ஆபாசமாக சித்தரித்து வீடியோவாக வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் தர்மரிடம் கேட்ட போது, ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார்.
இது குறித்து தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரை கண்ணன், ஏட்டு ஜெபராஜ் தலைமையிலான போலீசார் தஞ்சாவூருக்கு சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.