செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் வாலிபர் கைது

Published On 2020-09-17 08:12 GMT   |   Update On 2020-09-17 08:12 GMT
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு:

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 23). திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தங்கியிருந்து மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள 6 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தாள். இதுபற்றி அறிந்த சிவா அங்கு சென்றார். சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி, அங்குள்ள புதருக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து சிவா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கூச்சல் போட்டாள். இதையடுத்து சிவா அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதுகுறித்து அவளது பெற்றோர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். பின்னர் அவர் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் கோபி கிளை சிறையில் சிவா அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News