செய்திகள்
புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது
புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் புறநகரில் போலீசார் ரோந்து சென்றபோது ரங்கநாதபுரம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த விஜயராகவன் (வயது 50) என்பவர் டீக்கடை அருகே தடை செய்யப்பட்ட 68 புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்தார். போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததுடன் விஜயராகவனை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.