தமிழ்நாடு
திருப்பத்தூர் நகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் நேர்காணல் நடந்த காட்சி.

திருப்பத்தூர் நகராட்சியில் போட்டியிட ரூ.20 லட்சத்தை மேஜையில் கொட்டி சீட் கேட்ட தி.மு.க. பிரமுகர்

Published On 2022-01-29 07:15 GMT   |   Update On 2022-01-29 07:15 GMT
திருப்பத்தூர் நகராட்சியில் போட்டியிட நேர்காணலில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் ரூ.20 லட்சத்தை மேஜை மேல் கொட்டி சீட் வழங்குமாறு கேட்டார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நகராட்சியில் 36, வார்டுகளில் போட்டியிட தி.மு.க. சார்பில் 154 பேர் விருப்ப மனு அளித்தனர்.

விருப்ப மனு அளித்தவர்களிடம் திருப்பத்தூர் நகர தி.மு.க. அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ., நல்லதம்பி எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் எஸ் ராஜேந்திரன், தலைமையில் நிர்வாகிகள் வார்டு வாரியாக நேர்காணல் நடத்தினர்.

நேர்காணலில் பங்குபெற்ற தி.மு.க.வினரிடம் எந்த வார்டில் போட்டியிடுகிறீர்கள், எவ்வளவு செலவு செய்ய முடியும், வகிக்கும் பதவிகள், குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.

நேர்காணலில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் ரூ.20 லட்சத்தை மேஜை மேல் கொட்டி சீட் வழங்குமாறு கேட்டார்.

இதனால் நேர்காணலில் கலந்து கொண்ட தி.மு.க. பிரமுகர்கள் உடனடியாக பணத்தை எடுத்து உள்ளே வையுங்கள் என கூறினர். அவரிடம் விரைவாக நேர்காணலை முடித்து அனுப்பி வைத்தனர்.


Tags:    

Similar News