ஆன்மிகம்
குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2021-04-26 03:18 GMT   |   Update On 2021-04-26 03:18 GMT
குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கோவில் வளாகத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக 2-வது முறையாக தேராட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படிதாரர் மூலமாக திருவிழா நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று 2-ம் அலை காரணமாக தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதையொட்டி 10-ம் திருநாளான நேற்று நடைபெற இருந்த ஆழித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கோவில் வளாகத்தில் பக்தர்களின்றி நடைபெற்றது. முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக 2-வது முறையாக தேராட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News