செய்திகள்
தோகைமலை அருகே ஓட்டலில் மதுவிற்றவர் கைது
தோகைமலை அருகே ஓட்டலில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:
தோகைமலை அருகே உள்ள தெற்கு பள்ளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஓட்டலில் வேலைபார்க்கும் அருள் முருகன் (வயது 28) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.