செய்திகள்
பேரறிவாளன்

சஞ்சய்தத் முன்கூட்டியே விடுக்கப்பட்டது எப்படி?- பேரறிவாளன் மனு மீது மும்பை ஐகோர்ட்டு கேள்வி

Published On 2021-02-20 08:39 GMT   |   Update On 2021-02-20 08:39 GMT
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்று கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை:

இந்தி நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்ற விளக்கங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட காலமாக ஜெயிலில் இருக்கும் பேரறிவாளன், சிறை நிர்வாகத்திடம் கேட்டு இருந்தார்.

இதற்கான உரிய தகவல்களை பெற முடியாததால் பேரறிவாளன் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி? என்றும் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.


Tags:    

Similar News