தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஜியோவுக்கு நேரடி சவால் விடும் ஏர்டெல் புதிய திட்டம்

Published On 2018-10-28 05:22 GMT   |   Update On 2018-10-28 05:22 GMT
ரிலையன்ஸ் ஜியோவுக்கு நேரடியாக சவால் விடும் வகையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டத்தை அமல்படுத்த இருக்கிறது. #Airtel



பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை ஒரேகட்டமாக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதுவரை பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் அதிவேக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றப்பட இருக்கின்றனர்.

புதிய திட்டத்தின் மூலம் ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக்கு நேரடி போட்டியாளராக உருவெடுக்கும். தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவக்கம் முதலே 4ஜி நெட்வொர்க்கில் மட்டும் நேரடியாக சேவையை வழங்கி வருகிறது. 

ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் ஏர்டெல் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிவேக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றப்படுபவர். இதற்கென ஏர்டெல் நிறுவனம் 900 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரக்கை பயன்படுத்தி 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்க இருக்கிறது. ஜியோவுக்கு சமமான போட்டியை வழங்க ஏர்டெல் நிறுவனத்தின் உச்சக்கட்ட முடிவாக இது இருக்கும் என கூறப்படுகிறது.



“சமீப காலங்களில் 4ஜி நெட்வொர்க்கிற்கு அதிகளவு தேவை ஏற்பட்டு இருக்கிறது, எங்களது 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் 4ஜி வாடிக்கயாளர்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும், இதே நேரத்தில் எங்களின் 2ஜி சேவைகள் 1800 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் மூலம் வழங்கப்படும்,” என ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியான கோப்பால் விட்டல் தெரிவித்தார். 

3ஜி நெட்வொர்க்கில் இருந்து போதுமான வருவாய் கிடைப்பதில்லை, 3ஜி தொழில்நுட்பத்தின் முடிவு நெருங்கிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார். ஏர்டெல் நிறுவனம் டிரான்சிஷன் வழிமுறையை கொண்டு தனது வாடிக்கையாளர்களை 3ஜி நெட்வொர்ககில் இருந்து 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றுகிறது. 

இந்தியா முழுக்க 16 வட்டாரங்களில் 116 யூனிட் அலைக்கற்றைகளை 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் ஏர்டெல் நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது. இவை முழுக்க 4ஜி சேவைக்கென பிரத்யேகமாக பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவைகளை 900 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் மூலம் வழங்குவதற்கான பணிகளை செய்துள்ளது.

தமிழ் நாடு, உத்திர பிரதேசம் மேற்கு மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கில், ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் புதிய சலுகைகளை அறிவித்தது. இவற்றின் விலை ரூ.25 முதல் துவங்குகிறது.
Tags:    

Similar News