உள்ளூர் செய்திகள்
உறுதி மொழியேற்பு நடைபெற்ற காட்சி.

சமத்துவ நாள் உறுதி மொழியேற்பு

Published On 2022-04-15 09:29 GMT   |   Update On 2022-04-15 09:29 GMT
கரூரில் சமத்துவ நாள் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர்:

 அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மலர் தூவி  மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 மேலும், பட்டியலின அமைப்புகளை சேர்ந்த பலர் பங்கேற்று அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிராஜூதீன், பட்டியலின அமைப்புகளை சார்ந்த பலர் பங்கேற்று  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News