ஆன்மிகம்
உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா

உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடக்கிறது

Published On 2021-02-08 06:37 GMT   |   Update On 2021-02-08 06:37 GMT
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. விழாவில் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு வில்லிசை, கரகாட்டம், நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூ படப்பும், அதனைத் தொடர்ந்து 3 மணிக்கு அண்ண படப்பும் நடக்கிறது.

மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வில்லிசை, மகுடம், மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூ படப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News