ஆன்மிகம்
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் நிறைமணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் நிறைமணி காட்சி

Published On 2020-10-03 05:32 GMT   |   Update On 2020-10-03 05:32 GMT
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் நிறைமணி காட்சியையொட்டி கோவில் மூலஸ்தானம் மற்றும் முன் பகுதியில் 2 டன் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், இனிப்பு வகைகள் என அனைத்தும் பையில் கட்டி தொங்க விடப்பட்டது.
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியான நேற்று நிறைமணி காட்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் மூலஸ்தானம் மற்றும் முன் பகுதியில் 2 டன் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், இனிப்பு வகைகள் என அனைத்தும் பையில் கட்டி தொங்க விடப்பட்டது.

நாம் வேண்டியது நமக்கு கிடைக்க வேண்டும். உலகில் உள்ள ஜீவராசிகள் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும். மழை, இயற்கை வளங்கள் பெருகவேண்டும். விவசாயம் தழைக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இவை 3 நாட்கள் அப்படியே தொங்கவிடப்பட்டு இருக்கும். கடைசி நாளில் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும் என இணை கமிஷனர் லட்சுமணன், முன்னாள் அறங்காவலர் ரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News