செய்திகள்
பந்தலூரில் தொழிற்சங்கத்தினர் பேரணியாக சென்றபோது எடுத்த படம்.

வேலைநிறுத்த போராட்டத்தால் வங்கிகள், தபால் அலுவலகங்கள் வெறிச்சோடின

Published On 2020-01-09 17:49 GMT   |   Update On 2020-01-09 17:49 GMT
நீலகிரியில்வேலைநிறுத்த போராட்டத்தால்வங்கிகள், தபால் அலுவலகங்கள் வெறிச்சோடின. சாலை மறியலில் ஈடுபட்ட 290 பேரைபோலீசார்கைது செய்தனர்.
ஊட்டி:

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்உள்ள காலிபணியிடங்களைநிரப்ப வேண்டும், புதியஓய்வூதிய திட்டத்தைகைவிட்டு பழையஓய்வூதிய திட்டத்தைஅமல்படுத்த வேண்டும்,தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சஊதியம்ரூ.21 ஆயிரம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களான வங்கி,ரெயில்வே,பாதுகாப்புத்துறைகளைதனியார்மயமாக்கும்போக்கினை கைவிட வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வருமான வரி உச்சவரம்பைரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும்,

தொழிலாளர்களுக்குஎதிராக தொழிலாளர்நல சட்டங்களைதிருத்தியதை திரும்பபெற வேண்டும் என்பது உள்பட 12அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஊட்டிஎல்.ஐ.சி. அலுவலகத்துக்கு நேற்று ஊழியர்கள் மிகவும் குறைந்தஎண்ணிக்கையிலேயேவருகை தந்தனர். பெரும்பாலான ஊழியர்கள்வராததால், அலுவலகம் மற்றும் பணம் செலுத்தும்கவுண்ட்டர்வெறிச்சோடி இருந்தது. அலுவலகம் முன்புவேலைநிறுத்த போராட்டம்குறித்த அறிவிப்புநோட்டீஸ்ஒட்டப்பட்டு இருந்தது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் 181 தபால் அலுவலகங்கள் உள்ளன.ஊட்டி தலைமை தபால்அலுவலகத்தில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், அலுவலகம்வெறிச்சோடி கிடந்தது. சில தபால் அலுவலகங்களில் ஒருசிலரே பணிக்குவந்திருந்தனர். இதனால் நகர் மற்றும் கிராமப்புறங்களில்உள்ள தபால்அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. அதனால் தபால் பட்டுவாடா,பதிவு தபால்அனுப்புவது, சிறுசேமிப்பில் இருந்து பணம் எடுப்பது, மணியார்டர் போன்ற பணிகள் பெரிதும்பாதிக்கப்பட்டது.ஊட்டி தலைமை தபால்அலுவலகம் முன்பு அஞ்சலக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திகோ‌‌ஷங்களைஎழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டிமத்திய பஸ்நிலையத்தில் இருந்து வெளியிடங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்குஅரசு பஸ்கள்வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள், லாரிகள் வழக்கம்போல் இயங்கின. நீலகிரியில் மொத்தம் உள்ள 95 வங்கிகளில், சில வங்கிகளைதவிர பெரும்பாலானவங்கிகளுக்கு ஊழியர்கள் பணிக்கு வராமல்வேலைநிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வெறிச்சோடி இருந்தது.ஏ.டி.எம்.களில்ஏற்கனவேபணம் நிரப்பப்பட்டுஇருந்ததால்வாடிக்கையாளர்கள் மற்றும்சுற்றுலா பயணிகள்ஏ.டி.எம்.கார்டுபயன்படுத்தி பணத்தைஎடுத்து சென்றனர்.

வேலைநிறுத்தத்தால்வங்கி சேமிப்பு கணக்கில்பணம் செலுத்துவது, காசோலை எடுப்பது,பண பரிமாற்றம்போன்ற பணிகள்பாதிக்கப்பட்டன.ஐ.என்.டி.யு.சி.,ஏ.ஐ.டி.யு.சி.,சி.ஐ.டி.யு.,எல்.பி.எப்,எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,பச்சை தேயிலை கிலோவுக்குரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும், நீலகிரிமலை காய்கறிகளுக்குகுறைந்தபட்சவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டிஏ.டி.சி. பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அப்போது தொழிற்சங்கத்தினர்அரசு பஸ்சைமறித்து சாலையில்அமர்ந்துகோ‌‌ஷங்களைஎழுப்பி போராட்டத்தில்ஈடுபட்டனர். அங்குபாதுகாப்பு பணியில்ஈடுபட்டபோலீசார்12 பெண்கள் உள்பட 60பேரை கைதுசெய்து வேனில்ஏற்றி சென்றனர்.

கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்புதொ.மு.ச.,சி.ஐ.டி.யு.,மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு உள்ளிட்டஎதிர்கட்சியைசேர்ந்த தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்துகோ‌‌ஷங்களைஎழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பொதுத்துறைநிறுவனங்களை தனியாருக்குவிற்காதேஎன பல்வேறுகோ‌‌ஷங்களைஎழுப்பியவாறு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்குமுன்னெச்சரிக்கையாக பாதுகாப்புக்குநின்றிருந்தபோலீசார், மறியலில் ஈடுபட்டமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு செயற்குழுஉறுப்பினர்வாசுதலைமையில்ஒன்றிய செயலாளர்குஞ்சுமுகமது,தொ.மு.ச.மண்டல பொதுச்செயலாளர்நெடுஞ்செழியன் உள்பட 15பேரை கைதுசெய்துதனியார் திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர்

இதனிடையே கேரளாவில் முழு வேலைநிறுத்த போராட்டம்நடைபெற்றது. இதனால் கூடலூர்-கேரளாவுக்கு பஸ்கள், தனியார் வாகனங்கள்இயக்கப்படவில்லை. கர்நாடகாவில் இருந்து வந்தஅரசு பஸ்கள்கூடலூரில்நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்துக்குஆளாகினர். பின்னர் மாலை 6மணிக்கு பிறகுபஸ் போக்குவரத்து தொடங்கியது. இதேபோல்பந்தலூரில்தோட்ட தொழிலாளர்களின்கண்டன பேரணிநடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளர் நலவிரோத போக்கைகண்டித்தும், தொழிலாளர்நல சட்டங்களைதிருத்தம்செய்வதை கைவிடவேண்டும். பணி நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்துவதைஎதிர்த்து கண்டன பேரணிமேங்கோரேஞ்சில்புறப்பட்டுபந்தலூர்பஜாரைவந்தடைந்தது. இதில்ஏராளமானவர்கள்கலந்து கொண்டனர். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்குபி.டபுள்யு.யு.சி. பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.ஏ.ஐ.டி.யு.சி. தலைவர்பாலகிரு‌‌ஷ்ணன்,எல்.பி.எப்.துணை பொதுச்செயலாளர்மாடசாமி,சி.ஐ.டி.யு. செயலாளர்ரமே‌‌ஷ்,ஐ.என்.டி.யு.சி.லோகநாதன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுமாவட்ட செயலாளர்பாஸ்கரன்ஆகியோர் பேசினர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து 40 பேரைபோலீசார்கைது செய்தனர்.

கோத்தகிரி பஸ் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுந்தரம், ஏ.ஐ.டி.யு.சி. நீலகிரி மண்டல பொது செயலாளர் சையது இப்ராஹிம், ஜனநாயக வாலிபர் சங்க தாலூகா செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மகே‌‌ஷ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும், பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌‌ஷங்களை எழுப்பினர். பின்னர் பஸ் நிலையம் பகுதியில் கோ‌‌ஷங்களை எழுப்பியவாறு சற்று தூரம் சென்ற அவர்கள் திடீரென சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 40 பேரையும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகிலிருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி, தேவாலா, கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 290பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Tags:    

Similar News