செய்திகள்
ஒட்டப்பிடாரம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதியம்புத்தூர்:
ஒட்டப்பிடாரம் அருகே கொம்பாடி தெற்கு தெருவைச் சேர்ந்த கோபால் மனைவி சுடலைமாடி(வயது 81).
கோபால் இறந்து சுமார் 25 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் சுடலைமாடி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி வீட்டின் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மணியாச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடலை மாடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சுடலைமாடி மகன் பெரியசாமி அளித்த புகாரின் பேரில் மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஒட்டப்பிடாரம் அருகே கொம்பாடி தெற்கு தெருவைச் சேர்ந்த கோபால் மனைவி சுடலைமாடி(வயது 81).
கோபால் இறந்து சுமார் 25 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் சுடலைமாடி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி வீட்டின் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மணியாச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுடலை மாடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சுடலைமாடி மகன் பெரியசாமி அளித்த புகாரின் பேரில் மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.