செய்திகள்
கோப்புப்படம்

பெங்களூருவில் 9 மாத குழந்தை உள்பட ஐந்து பேர் உடல்கள் கண்டெடுப்பு

Published On 2021-09-17 15:40 GMT   |   Update On 2021-09-17 15:40 GMT
வீட்டில் நான்கு பேர் தூக்கிட்ட நிலையில், 9 மாத குழந்தை படுக்கையறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திகலராபால்யா என்ற இடத்தில் ஒரு வீட்டில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 9 வயது குழந்தையும் ஒருவர். குழந்தையை தவிர மற்ற நான்கு பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். ஒரேயொரு குழந்தை மட்டும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News