செய்திகள்
கொரோனா வைரஸ்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

Published On 2020-05-19 09:05 GMT   |   Update On 2020-05-19 09:05 GMT
கீழ்பென்னாத்தூர் தாலுகா கீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151 ஆக இருந்தது.

இந்த நிலையில் நேற்று கீழ்பென்னாத்தூர் தாலுகா கீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அதேபோல் செய்யாறு அக்கூர் அருகே உள்ள திலீபை பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுமியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதனால் கொரோனா வைரசின் பாதிப்பு 155 ஆக உயர்ந்தது. இதில் 40 பேர் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். மீதமுள்ள 114 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News