செய்திகள்
நீரில் மூழ்கி பலி

பொத்தேரியில் ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2020-10-21 07:12 GMT   |   Update On 2020-10-21 07:12 GMT
பொத்தேரியில் ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

சென்னையை அடுத்த குரோம்பேட்டை வள்ளுவர் தெரு, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவர், குரோம்பேட்டையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் பொத்தேரி ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

பலியான ராஜேஷ் உடலை பல மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர். இதுபற்றி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையிலேயே ராஜேஷ் ஏரியில் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாராவது அவரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News