செய்திகள்
கைது

சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

Published On 2021-04-30 14:24 GMT   |   Update On 2021-04-30 14:24 GMT
சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:

சமயநல்லூர் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 29). இவர் வீட்டின் முன்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் எழுந்துவந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது தெரியவந்தது. இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அங்குள்ள பஸ் நிறுத்ததில் சந்தேகப்படும்படியாக நின்ற|விரகனூர் புளியங்குளம் அருண்குமார்(23,) பள்ளபட்டி சத்ரியனை(23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News