செய்திகள்
கோப்புப்படம்

குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருந்தும் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற வேட்பாளர்

Published On 2021-10-12 10:17 GMT   |   Update On 2021-10-12 11:11 GMT
கோவை குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.
கோவை:

கோவையில் கடந்த 9ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.

இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் 196 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கு மொத்தம் 910 வாக்குகள் பதிவாகி இருந்தது.


ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். இது தவிர அவருக்கு உறவினர்கள், நண்பர்கள், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள் என பலர் இருந்தும் அவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News