செய்திகள்
ராமநாதபுரம் பகுதியில் விடிய, விடிய அடைமழை- பாம்பனில் 11.42 செ.மீ. மழை
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. ஓம்சக்தி நகர், ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெரு, அல்லிக்கண்மாய் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இடைவிடாது பெய்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் நேற்று இரவு முதல் ராமநாதபுரம், கீழக்கரை, பனைக்குளம், திருப்புல்லாணி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதியில் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.
அதிகபட்சமாக பாம்பனில் 114.20 மி.மீ. மழையும், குறைந்த பட்சமாக கமுதியில் 5.80 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 599.40 மி.மீ. மழையும் சராசரியாக 37.46 மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அடிக்கடி ஏற்பட்ட மின் தடையால் மக்கள் அவதிப்பட்டனர். வீடுகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. ஓம்சக்தி நகர், ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெரு, அல்லிக்கண்மாய் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது.
போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடு, தெருக்கள் சேதமடைந்து குண்டும் குழியுமாகி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த நிலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம் -23.00
மண்டபம்-113.20
ராமேசுவரம் -38.40
பாம்பன்-114.20
தங்கச்சிமடம் - 88.70
பள்ளமோர்க்குளம் -23.00
திருவாடானை -22.60
தீர்த்தாண்டதானம் - 32.70
தொண்டி-48.50
வட்டாணம் -31.90
பரமக்குடி-12.20
முதுகுளத்தூர்-11.00
கமுதி-5.80
கடலாடி-6.00
மொத்த அளவு- 599.40, சராசரி-37.46 மி. மீ, மழை பதிவாகியுள்ளது.