செய்திகள்
டி.வி. சீரியலில் நடிக்க வைப்பதாக 7 மாத ஆண் குழந்தை கடத்தல்
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் டி.வி. சீரியலில் நடிக்க வைப்பதாக கூறி 7 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் ஜானே போஸ்லே. இவரது மனைவி ரதிஷா. இவர்களது 7 மாத ஆண் குழந்தை ஜான். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர்கள் இந்த பகுதியில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று ராதா (23) என்ற இளம்பெண், ரதிஷாவிடம் ‘தான் டி.வி. சீரியலில் குழந்தைகளை நடிக்க வைத்து வருவதாகவும், உங்கள் குழந்தையையும் நடிக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.
ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கம் அருகில் ரதிஷாவை வரச் சொல்லி குழந்தையை மருத்துவமனையில் காண்பித்து வருவதாக வாங்கி சென்றார். அதன் பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பூக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குழந்தையை கடத்திய ராதாவை தேடி வருகிறார்கள்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பலூன் வியாபாரம் செய்து வருபவர் ஜானே போஸ்லே. இவரது மனைவி ரதிஷா. இவர்களது 7 மாத ஆண் குழந்தை ஜான். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர்கள் இந்த பகுதியில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று ராதா (23) என்ற இளம்பெண், ரதிஷாவிடம் ‘தான் டி.வி. சீரியலில் குழந்தைகளை நடிக்க வைத்து வருவதாகவும், உங்கள் குழந்தையையும் நடிக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.
ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கம் அருகில் ரதிஷாவை வரச் சொல்லி குழந்தையை மருத்துவமனையில் காண்பித்து வருவதாக வாங்கி சென்றார். அதன் பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பூக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் குழந்தையை கடத்திய ராதாவை தேடி வருகிறார்கள்.