செய்திகள்
உயிரிழந்த மகன்-தந்தை

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிவு- சிபிஐ தகவல்

Published On 2020-09-08 06:30 GMT   |   Update On 2020-09-08 06:35 GMT
ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது.
மதுரை:

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.  2 பேரின் மீதான நடவடிக்கை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் சிபிஐ தெரிவித்துள்ளது. 

ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் சிபிஐ இந்த வாதத்தை முன்வைத்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

Tags:    

Similar News