செய்திகள்
ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுக துண்டுடன் சசிகலா சாமி தரிசனம்
ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுக துண்டுடன் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளார். இதனிடையே சசிகலா அதிமுக கொடியை காரில் பறக்கவிட்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தடையை மீறி பயன்படுத்திய கொடி அந்தக் காரில் இருந்து அகற்றப்பட்டது.
இதையடுத்து ஓசூர் ஜூஜூவாடி அருகே அவர் மற்றொரு காருக்கு மாறினார். அந்த காரில் அதிமுக கொடி பறக்கிறது. தமிழகத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சசிகலா மாறிய மற்றொரு காரில் அதிமுக கொடி பறந்து வருவதால் சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் அளித்தனர். நோட்டீஸ் மட்டுமே தந்த நிலையில் சசிகலாவின் காரில் இருந்து போலீசார் அதிமுக கொடியை அகற்றவில்லை. சசிகலா மாறிய மற்றொரு கார் அதிமுக உறுப்பினர் காராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக துண்டுடன் ஓசூர் முத்துமாரி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
சாலை மார்க்கமாக அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் அவர் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். வழிநெடுக அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அத்துடன் அவரின் காருக்கு பெண்கள் ஆரத்தியும் எடுத்து வரவேற்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளார். இதனிடையே சசிகலா அதிமுக கொடியை காரில் பறக்கவிட்டு வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தடையை மீறி பயன்படுத்திய கொடி அந்தக் காரில் இருந்து அகற்றப்பட்டது.
இதையடுத்து ஓசூர் ஜூஜூவாடி அருகே அவர் மற்றொரு காருக்கு மாறினார். அந்த காரில் அதிமுக கொடி பறக்கிறது. தமிழகத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சசிகலா மாறிய மற்றொரு காரில் அதிமுக கொடி பறந்து வருவதால் சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் அளித்தனர். நோட்டீஸ் மட்டுமே தந்த நிலையில் சசிகலாவின் காரில் இருந்து போலீசார் அதிமுக கொடியை அகற்றவில்லை. சசிகலா மாறிய மற்றொரு கார் அதிமுக உறுப்பினர் காராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக துண்டுடன் ஓசூர் முத்துமாரி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
சாலை மார்க்கமாக அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் அவர் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். வழிநெடுக அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அத்துடன் அவரின் காருக்கு பெண்கள் ஆரத்தியும் எடுத்து வரவேற்றனர்.