செய்திகள்
கோப்புபடம்

மணிகண்டம் அருகே கஞ்சா விற்ற மூதாட்டி கைது

Published On 2020-10-17 07:13 GMT   |   Update On 2020-10-17 07:13 GMT
மணிகண்டம் அருகே கஞ்சா விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மணிகண்டம்:

ராம்ஜிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிச்சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சென்று கண்காணித்தனர். 

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பானுமதி (வயது 60) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ராம்ஜி நகர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை திருச்சி ஜே.எம்.-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News