ஆன்மிகம்
திருவட்டாரில் துர்க்கை அம்மன் தரிசன நிகழ்ச்சி

திருவட்டாரில் துர்க்கை அம்மன் தரிசன நிகழ்ச்சி

Published On 2021-09-29 07:55 GMT   |   Update On 2021-09-29 07:55 GMT
திருவட்டார் ஸ்ரீராமன்கோணம் தர்ம சாஸ்தா கோவிலில் திருமண தடைகள் நீங்கிடவும், குழந்தை செல்வம் கிடைக்கவும் வேண்டி துர்க்கை அம்மனுக்கு பூஜை, வழிபாடுகள் நடந்தது.
இந்து கோவில் கூட்டமைப்பு சார்பில் துர்க்கை அம்மன் தரிசன நிகழ்ச்சி திருவட்டார் ஸ்ரீராமன்கோணம் தர்ம சாஸ்தா கோவிலில் நடந்தது.

கொரோனா நோயில் இருந்து மக்களை காக்கவும், நலிவடைந்த தொழில்கள் விருத்தி அடையவும், திருமண தடைகள் நீங்கிடவும், குழந்தை செல்வம் கிடைக்கவும் வேண்டி துர்க்கை அம்மனுக்கு பூஜை, வழிபாடுகள் நடந்தது. கோவில் கமிட்டி செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

டாக்டர் சாரதி குத்துவிளக்கு ஏற்றினார். இதில் கோவில் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வேலுதாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீபதிராஜ், ஒன்றிய தலைவர் தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News