செய்திகள்
ராணிப்பேட்டையில் மனைவியை கத்தியால் குத்தியவர் கைது
ராணிப்பேட்டையில் மனைவியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 29). இவருக்கும், ராணிப்பேட்டை புதுத்தெரு பகுதியைச் சார்ந்த ரோஜா மேரி என்ற ரோஸ்மேரி (24) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
பழனி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். 22-ந்தேதி வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்து கத்தியால் கன்னத்தில் குத்தினார். இதுகுறித்து ரோஜாமேரி ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வாசுகி, பழனியை கைது செய்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.