செய்திகள்
நகை மீட்பு

திருவள்ளூர் ரெயிலில் தவறவிட்ட நகை-பணம் மீட்பு

Published On 2019-11-09 09:38 GMT   |   Update On 2019-11-09 09:38 GMT
திருவள்ளூர் ரெயிலில் பயணி தவறவிட்ட நகை, பணத்தை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் அதை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தாமஸ் என்பவர் புறநகர் ரெயிலில் ஏறி உள்ளார். வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இறங்கும்போது பையை மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டார். இதுகுறித்து ரெயில்வே அவசர உதவி எண்.182-க்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் மற்றும் போலீசார் திருவள்ளூரில் மின்சார ரெயிலில் சென்று பார்க்கும்போது பை இருந்தது. அவற்றை கைப்பற்றி அதனை சோதனை செய்ததில் அதில் வங்கி பாஸ்புத்தகம், 4 பவுன் நகை இருந்தது. தாமசை வரவழைத்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் பையை ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News