செய்திகள்
திருவள்ளூர் ரெயிலில் தவறவிட்ட நகை-பணம் மீட்பு
திருவள்ளூர் ரெயிலில் பயணி தவறவிட்ட நகை, பணத்தை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் அதை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தாமஸ் என்பவர் புறநகர் ரெயிலில் ஏறி உள்ளார். வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இறங்கும்போது பையை மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டார். இதுகுறித்து ரெயில்வே அவசர உதவி எண்.182-க்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் மற்றும் போலீசார் திருவள்ளூரில் மின்சார ரெயிலில் சென்று பார்க்கும்போது பை இருந்தது. அவற்றை கைப்பற்றி அதனை சோதனை செய்ததில் அதில் வங்கி பாஸ்புத்தகம், 4 பவுன் நகை இருந்தது. தாமசை வரவழைத்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் பையை ஒப்படைத்தனர்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தாமஸ் என்பவர் புறநகர் ரெயிலில் ஏறி உள்ளார். வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இறங்கும்போது பையை மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டார். இதுகுறித்து ரெயில்வே அவசர உதவி எண்.182-க்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் மற்றும் போலீசார் திருவள்ளூரில் மின்சார ரெயிலில் சென்று பார்க்கும்போது பை இருந்தது. அவற்றை கைப்பற்றி அதனை சோதனை செய்ததில் அதில் வங்கி பாஸ்புத்தகம், 4 பவுன் நகை இருந்தது. தாமசை வரவழைத்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் பையை ஒப்படைத்தனர்.