உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் பிரமசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
சாத்தான்குளம் தெற்குராமசாமிபுரம் பிரமசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தெற்குராமசாமிபுரம் பிரமசக்தி அம்மன் கோவில் கொடை விழா 3நாட்கள் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள், தீபாராதனைகள், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை இந்து முன்னணி மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து 374 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நெல்லை கோட்ட இந்து முன்னணி செயலர் சக்திவேலன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் பரமேஸ்வரி பூஜையை வழி நடத்தினார்.
இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் பாடி அன்னையை வழிபட்டனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலர் செல்வராஜ், கோவில் நிர்வாகி செல்வகுமார், இந்து அன்னையர் முன்னணி கிளை பொறுப்பாளர் லலிதா, இந்து முன்னணி கிளை தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.