செய்திகள்
பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள சாம்பிள்கள்

புதிய உச்சம்... இந்தியாவில் ஒரே நாளில் 14.92 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை

Published On 2020-09-25 04:08 GMT   |   Update On 2020-09-25 04:08 GMT
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 14.92 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்ந்தவண்ணம் உள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 13.80 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியை நெருங்கி உள்ளது. நேற்று வரை 6,89,28,440 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக 14,92,409 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News