செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

சென்னையில் 2,960 ஓட்டுச்சாவடி வாக்குப்பதிவு இணையத்தில் கண்காணிப்பு

Published On 2021-04-06 11:59 GMT   |   Update On 2021-04-06 11:59 GMT
சென்னையில் வாக்குப் பதிவு மையங்களை தலைமை செயலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது.

சென்னை:

சென்னையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடி களிலும் காலையிலேயே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

ஏற்கனவே 307 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டது. அந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையின் கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

சென்னையில் வாக்குப் பதிவு மையங்களை தலைமை செயலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. இந்த அறையில் இருந்து 2,960 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து கொண்டிருந்தனர்.

வெப்காமிரா பொருத்தப்பட்டிருந்த அந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் உள்ளே செல்வது முதல், அங்கு நடைபெறும் பணிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் கவனித்துக் கொண்டிருந்தது.

மந்தமாக பணிகள் நடந்த மையங்களுக்கு தகுந்த அறிவுரைகளையும் அதிகாரிகள் வழங்கிக் கொண்டிருந்தனர்.

Tags:    

Similar News