செய்திகள்
விபத்து பலி

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலி

Published On 2021-11-23 09:07 GMT   |   Update On 2021-11-23 09:07 GMT
தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி குண்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் குட்டி (வயது 55) கட்டிட மேஸ்திரி. இவர் சேலம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த குட்டியை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News