செய்திகள்
மாதவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை
மாதவரத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மாதவரம்:
மாதவரம் தணிகாசலம் நகர் இ-பிளாக் ராஜாஜி 1-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி.
நேற்று மாலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 சவரன் நகை ரூ.10 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து நாகராஜ் மாதவரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
மாதவரம் தணிகாசலம் நகர் இ-பிளாக் ராஜாஜி 1-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி.
நேற்று மாலை இருவரும் வீட்டை பூட்டிவிட்டு திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 சவரன் நகை ரூ.10 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து நாகராஜ் மாதவரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.