செய்திகள்
தற்கொலை

செண்பகராமன்புதூரில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை

Published On 2021-02-22 17:29 GMT   |   Update On 2021-02-22 17:29 GMT
செண்பகராமன்புதூரில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால், டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:

டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி என்ற குபேந்திர மூர்த்தி (வயது 47), டிராக்டர் டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மூர்த்தி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும், அதை மகாலட்சுமி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மூர்த்தி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் மூர்த்தியை மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மூர்த்தி சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் மூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News