தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். சலுகைகளில் அதிரடி மாற்றம்

Published On 2019-12-17 05:51 GMT   |   Update On 2019-12-17 05:51 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது.



பி.எஸ்.என்.எல். நிறுவனம் கேரளாவில் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது. அதன்படி ரூ. 118, ரூ. 187, மற்றும் ரூ. 399 பிரீபெயிட் சலுகைகளின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணத்தை உயர்த்தின.

கேரளாவில் பி.எஸ்.என்.எல். ரூ. 118 சலுகை தற்சமயம் 21 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மற்ற வட்டாரங்களில் இந்த சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. வேலிடிட்டி தவிர சலுகையின் பலன்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 



ரூ. 187 சலுகையின் வேலிடிட்டியும் 28 நாட்களில் இருந்து தற்சமயம் 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 3 ஜி.பி. அதிவேக டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

பி.எஸ்.என்.எல். ரூ. 153 பிரீபெயிட் சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 21 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இதேபோன்று ரூ. 399 சலுகையின் வேலிடிட்டி 65 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதே சலுகை மற்ற வட்டாரங்களில் 80 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனினும், இதன் டேட்டா அளவு தினசரி 1 ஜி.பி.யில் இருந்து தற்சமயம் தினமும் 2 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News