உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை கலெக்டர் பிரபு சங்கர் வழங்கிய காட்சி.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை

Published On 2022-01-12 09:34 GMT   |   Update On 2022-01-12 09:34 GMT
கரூர் மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கலையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கிவைத்தார்.
கரூர்:

பொங்கல் பண்டிகையையொட்டி ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் வேட்டி,  சேலைகள் வழங்கும் விழா தாந்தோணிமலை ரேஷன் கடையில் நேற்று நடைபெற்றது. 

மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். அப்போது பலருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், ஹேப்பி பொங்கல் என வாழ்த்துக்கூறி இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார்.

இதில் கரூர் மாவட்டத்தில் 3,19,479 ரேஷன் அட்டைதாரர்களுக்கு 593 ரேஷன் கடைகள் மூலமாக 2,92,134 வேட்டிகள் மற்றும் 3,08,421 சேலைகள் வழங்கப்பட உள்ளது. 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, வட்டாட்சியர் மோகன்ராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News