செய்திகள்
கரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 24). இவர் கடந்த ஓராண்டாக வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் நேற்று முன்தினம் அங்கமுத்து தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.