செய்திகள்
கோப்புபடம்

விழுப்புரம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Published On 2020-10-16 11:58 GMT   |   Update On 2020-10-16 11:58 GMT
விழுப்புரம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டியை சேர்ந்தவர் அப்துல்ரகீம் (வயது 68). அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, சிவபாலன், தனஞ்செயன் ஆகியோர் அப்துல்ரகீம் வீட்டின் அருகில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர். 

இதை தட்டிக்கேட்ட அப்துல்ரகீமை ஏழுமலை உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஏழுமலை உள்ளிட்ட 3 பேர் மீதும் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News